Monday, 14 July 2025

நானே... பெய்தேன்





மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் புதுச் சிந்தனைகளைத் தந்தும் இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கின்ற  திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம். பலவாறான கருத்துகளைத் தாங்கிய உரைகள் ஏராளம் கண்டது திருக்குறளே. அண்மையில் வள்ளுவத்துக்கு உரையெழுதி வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிறப்புதான். அவரது கருத்துகளும் வளம் சேர்க்கலாம். உருவகங்கள் ஒருவேளை இளையோரைச் சென்றடையலாம். நல்லதுதான். 

ஆனால், தன் உரை குறித்து விளம்பரப்படுத்தும் முகமாக,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் - 55) எனும் குறளுக்கு;

"கடவுளைத் தொழாது கணவனையே தொழுது எழும் இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று காலங்கலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத்தான் ஆளாகும். அந்த சர்ச்சையை என் உரையில் நான் சரி செய்திருக்கிறேன். எழுதியிருக்கிறேன் 'கட்டமைக்கப்பட்டத் தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவனையே தொழுது எழுகின்ற ஒரு பெண், பெய் என்று சொன்னவுடன் பெய்கின்ற மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என்று எழுதியிருக்கிறேன். சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழையில்லை." என ஒழு விழியத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். 

Friday, 11 July 2025

கண்ணகிக் கோட்டம் - எது மெய்?




 முனைவர் துளசி. இராமசாமி எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1987ல் வெளியிட்ட மங்கல தேவி கண்ணகி கோட்டம் (நாட்டுப்புறவியலார் அணுகுமுறை) எனும் நூலில்,

கூடலூர் மக்களுக்குப் பாத்தியப்பட்ட கோவில் போன்று இருப்பது தான் மங்கலதேவி கோட்டம். இம்மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம் என்று முதன்முதலில் உலகுக்குச் சொல்லி வந்தவர்கள் கூடலூர் மக்களாவார்கள்; ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்று இருந்தது; தமிழகத்திலுள்ளவர்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய சங்க மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார்தான் முதன் முதலில் மங்கலதேவி கோட்டம் கண்ணகி கோட்டமாகும் என்று முறையாக அறிக்கைவிட்டு, அதை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கு.காமராசு அவர்களிடம் 1957-இல் முறையிட்டு இக்கண்ணகி கோட்டத்தைச் சீர்படுத்த வேண்டும்; சுற்றுலா மையமாக்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். ஆனால் ஏனோ அவரின் முறையீட்டை யாரும் கண்டு கொள்ள வில்லை.

Thursday, 19 June 2025

இன்னொருமுறை


 


வலிகளுக்கெல்லாம்

அழவேண்டுமெனில்,

சிரிப்பதற்கென்று

இன்னொருமுறை 

பிறக்கவேண்டியிருக்கும்.


 19-06-2020

திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்

 



எல்லோர் வீட்டு வாயிலிலும்
நின்றுகொண்டிருக்கிறது
மரணம்,
ஐயமில்லை.

நாம் எதற்கு
வாயிலைத் திறக்கவேண்டும்?
திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்.
அச்சமின்றி இருங்கள்.
அதுவாக வரட்டும்.
காத்திருங்கள்.

======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
19-06-2021
======================

Saturday, 14 June 2025

தேயா மலை



செம்மறியாடுகள் முட்டிச்
சாய்ந்திட
செம்மண் சுவரல்லடா
தலைவன்;
திரைகடல் பல்லாண்டு
தீண்டியும் தேயாத
திருகோணமலையடா!!

=====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
14-06-2021
=====================