Sunday 25 July 2021

முதுமுனைவர் இளங்குமரனார் - மறைவு

 



தொன்மண்ணாம் தென்மண்ணில்
தோன்றிய தமிழ்க்கடல்.
காவிரிக் கரையில்
வேர்விட்ட மூதாலம்.
பொருளும் சொல்லும்
மழையெனப் பொழிந்த
பெருந்தமிழ் மரபின்
வழிவந்த அடர்மேகம்.
தேவநேயம் தொகுத்தளித்த
தென்மொழியின் பொதியில்மலை.
செந்தமிழர் இறுமாப்பு.

உமை இழந்து வாடுவதும்
ஒரு நோன்பே.
அருந்தமிழின் வேர்பிடித்து
பெருவழியில் நடந்திடவே
உம் நினைவே உரமாகும்.
உம் எழுத்தே தடமாகும்.
நோன்பேற்று வினை முடிப்போம்.

உளைவின்றி உறங்குவீரே
தமிழ்மடியில்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்