Monday 26 February 2018

இறையே...



எங்கே இருக்கிறாய்

இலைகள் பரப்பும் நிழலின் விரிப்பிலா

எரிமலை விசிறிய சாம்பல் மேட்டிலா

பூக்களின் மேல்கண்ட பனிநீர்த் துளியிலா

பூமியை உட்கொண்ட சுனாமி அலையிலா

கோயில் உண்டியல் தங்கக் காசிலா

கோரப் பசியின் நாக்கு நுனியிலா

இரவு விடுதிகளின் இருட்டு மறைவிலா

முதியோர் இல்ல மூலைக் காற்றிலா

அண்டை மனிதர் அன்பின் இருப்பிலா

தொண்டை கிழிக்கும் துப்பாக்கி முனையிலா

பூக்கள் சிதறும் மகரந்தத் துளியிலா

புன்னகை மறந்த பிஞ்சுகள் விழியிலா

எங்கே இருக்கிறாய் இறையே

நீ எங்கே இருக்கிறாய்.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்