Wednesday, 7 May 2025

இயலுமா?



மலர்கிறோம் என்பதை

மலர்கள் அறியுமா?


பாய்கிறோம் என்பதை

அருவிகள் உணருமா?


ஓடும் ஆறுகள்

ஓய்வினைத் துய்க்குமா?


தேங்கிய ஏரிகள்

ஓடிட எண்ணுமா?


நூறு கூறாய் நொடியைத் துணித்த,

இம்மியளவு இடைவெளியில்;

உள்ளில் கிளர்ந்த 

மகிழ்வின் நிகழ்வை,


மறுபடியொருமுறை

மனம் பெற இயலுமா?


=========
07-05-2024
=========

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்