Thursday 18 May 2017

சொல்லப்படாத சொற்கள்


ஆரவாரம் நிறைந்த சாலையில்
அந்திமயங்கும் வெளிச்சத்தில்
உன்னைப் பார்க்கிறேன்.
என்
உதடுகள்  தானாகச் சிரிக்கின்றன.
பார்த்து நாளாச்சு என்கிறாய்
நீ
பக்கத்தில் இருப்பது யாரென
சம்பந்தம் இன்றி கேட்கிறேன்
நான்.
சொன்னாய்
விடைபெற்றோம்
நாம்.
விலகி நடக்கையில்
உன்னிடம் சொல்லாத
ஓராயிரம் சொற்களால்
என்
உள்ளம் நிறைகிறது
தோழி.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்