Tuesday 28 August 2018

வடக்கிருத்தல்

எப்படிப்பட்ட நண்பன் இருந்தால் நீங்கள் பிசிராந்தையார் செய்த செயலைச் செய்யத் துணிவீர்கள்
அல்லது
எந்த நட்புக்காக பிசிராந்தையாரா மாறுவீங்க ...? ஏன்....?
இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் கற்பனை சிறகை விரிக்கலாம்.....

என்று "நிலாச்சோறு" முகநூல் குழுமத்தில் கேட்கப்பட்டபோது 23/08/2018 அன்று எழுதிய பாடல் இது. முதலிடத்தையும் பெற்றது. தேர்வு செய்த நடுவர் அடேய் சர வணா அவர்களுக்கும், சிறப்பு நடுவர் பரமசிவம் நெடுஞ்சேரலாதன் அவர்களுக்கும் நன்றி.
---------------------------------------------------------------------------------------
 
 
காவிரி திறந்து விடு

இல்லை என்

கழுத்தறுத்து இறப்பேன்

என்றுரைக்கும்

கருநாடக நண்பன்
,

முல்லைப் பெரியாறு

அணையை

முழுவதும் நிரப்புங்கள்

இல்லை அதில்

மூழ்கி இறந்திடுவேன்

என்றுரைக்கும்

கேரள நண்பன்
,

தமிழர் மீதினி

தாக்குதல் தொடுத்தால்

தலை கொய்து

நவ கண்டம் கொடுப்பேன்

என்றுரைக்கும்

சிங்கள நண்பன்

இவரில் எவரேனும்

என் எதிரில் இறப்பின்

மகிழ்வுடன் வடக்கிருப்பேன்

வாழும் என் நாடு.

-----
சிராப்பள்ளி மாதேவன்.

 
 


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்