Wednesday 8 May 2019

எண்ணமழை


குமரியின் அலைச் சுருளில்
தஞ்சையின் வயல் வெளியில்
மலராடும் மலைமுகட்டில்
மாமதுரை வீதிகளில்
பொன்னியின் கரைமருங்கில்
புகைவீசும் அருவிதன்னில்
சென்னையின் பரபரப்பில்
சிந்திட அணியமாகி
வந்தது அடர்மேகம்.
குடைபிடிப்போர் விரித்துக்கொள்ள
விரும்பாதோர் வீடடங்க
வேண்டிநிற்போர் அகமகிழ
தேசமெங்கும் தூறல்விழ - தமிழ்த்
தேசியத்தின் எண்ணமழை
வாசிகொண்டு பெய்யுதம்மா.
மெல்ல விழும் துளியில் - இந்த
மேதினி செழிக்குமம்மா.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்