Thursday 16 May 2019

அழியா விதி


பூக்களைப் புதைத்துவிட்டால்
விதைகள் கிடைக்காதென்ற
எண்ணத்தை,
ஒருநாள் மாற்றியெழுதும் காலம்.
விடுதலையின் தாகம்
விரவிக்கிடக்கிறது காற்றில்,
மகரந்தமென.
அது,
சிம்புள் பறவையொன்று அருந்தும்
மழைத்துளியில் சேர்ந்திருக்கலாம்.
தென்கடல் சுறவொன்றின்
மூச்சிலிருந்து முகிழ்ந்து வரலாம்.
நாளை...
அரும்புகள் கூட
ஆழிவேலாகலாம்.
மிச்சமிருக்கும் காலமெல்லாம்
அச்சப்படவேண்டுமென்பது உமக்கு
அழியா விதி.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்