Tuesday 13 August 2019

நஞ்சுக் கொண்டல்


தீச்சுடரில் உளிகொண்டு
சிலைசெய்தேன் காணீரோ என்ற
வாயில் வடைசுடுவோர்
திருமொழி கேட்டு,
கண்டேன்! கண்டேன்!! எனத்
தண்டமிடுவோர் தானே
கொண்டலில் நஞ்சேற்றும்
கொடுமை செய்வார்.
நன்னிலத்தில் நஞ்சுநிறை
கொண்டல் பெய்ய
நாளையொரு பாலைபோல
பாழாகும் பொன்னாடே!



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்