Saturday 10 December 2022

மணநாள் 2022

 


நீ,

தூசி தட்டுகிறபோதும்

இசைக்கிறது யாழ்.

 

அடிக்கடி நடக்கும்

சின்னச் சண்டைகளால்

அகத்திணைக்குள் மட்டும்

அடங்காது

புறத்திணைக்குள்ளும்

முகங் காட்டும்

நம் காதல்.

 

ஆனாலும்,

உன்

காதல்வரி தீராது

காதுகள் நிறைய;

கானல்வரி பாடாது

கழிந்தது என் காலம்.

 

மறுபிறப்பு இல்லையெனும்

அறிவியலைத் தள்ளிவைத்தேன்.

பிறப்பறுக்கும் பெருங்கருத்தை

வெறுக்கின்றேன் உன்னாலே.

இன்னொரு முறையும்

இந்த வாழ்க்கைக்

கிடைக்குமென்ற ஆசையிலே.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்