Sunday 9 June 2024

தாகம்




பால் வீதிகளை மாற்றிப்
பதியம் போட்டாலும் 
ஒரு நாள்
பார்தொழ முளைத்தெழும் 
செங்காந்தள் .

ஆயுதங்கள் மாறியிருக்கின்றன.
போராட்டம்
அப்படியே இருக்கின்றது.

உலைத்துக் கலைந்திட
தாயகம் எமக்குக்
கனவல்ல,
கோடி உயிர்களின்
ஒற்றைத் தாகம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்