Sunday 17 June 2018

தருக்கம்

தருக்கத்தின் மீது வளர்ந்ததே மாந்த இனத்தின் வளர்ச்சி. தருக்கமின்றி எதைச் செய்கிறபோதும் அது அழிவை நோக்கியே நகர்ந்திருக்கிறது. எல்லா முடிவுகளும் தருக்கத்திற்குப் பின்னேதான் வெளியிடப்படவேண்டும்.

["35 ஆண்டுகளுக்கு முன் எனக்கு டைபாயிடு சுரம் என்று அறிந்த மருத்துவர், ஒரு நாளைக்கு 6 அமொக்சிசிலின் மாத்திரை கொடுத்து நோயைக் குணப்படுத்தினார். இன்றோ புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பின் கிருமித்தொற்று வராமலிருக்க மொத்தமே (ஒரு நாளைக்கு அல்ல) 5 அமொக்சிசிலின் மத்திரைக்கு மேல் கொடுக்கக் கூடாது என்கிறது மருத்துவம்." இது அறிவியல்.]

அறிவியல் பரிசோதனை சார்ந்தது. முடிவுரைப்பது அல்ல. ஆனால் தருக்கம் இயலிலிருந்து தோன்றுவது. இயல் என்பது கணக்கீடுகளல்ல. அது இருப்பது. தமிழரின் தருக்கவியல் உலகறிந்தது. அது கடவுளைக் கூட தருக்கத்திற்கு உட்படுத்தியது. எண்ணியக் கோட்படுகளும், ஆட்டைக் கணக்குகளும், உணவு முறைமையும், நோயறிதலும் அதனால்தான் தோன்றின.

"எப்பொருள்-
யார்-
யார் வாய்க் கேட்பினும்-
அப்பொருள்-
மெய்ப்பொருள்-
காண்பது-
அறிவு."

"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு"

"உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு."

தருக்கம் என்பது விவாதமல்ல.

தருக்கமின்றி எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்