Friday 29 April 2022

நூறில் ஒன்று

 


மலர்கிறோம் என்பதை

மலர்கள் அறியுமா?

பாய்கிறோம் என்பதை

அருவிகள் உணருமா?

ஓடும் ஆறுகள்

ஓய்வினைத் துய்க்குமா?

தேங்கிய ஏரி

ஓடிட எண்ணுமா?

நூறு கூறாய் நொடியைத் துணித்த

இம்மியளவு இடைவெளியில்

உள்ளில் கிளர்ந்த மகிழ்வின் நிகழ்வை

மறுபடியொருமுறை

மனம் பெற இயலுமா?

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்