Saturday 27 October 2018

யாருமின்றி...


அம்மாவின் அன்பு,
தம்பிக்கு பணி அமர்த்தல் கடிதம்,
தங்கை சூல்கொண்ட சேதி,
வெளிநாட்டு மாமன் அனுப்பிய
மகளின் புகைப்படம்,
ஊருக்கே வராத பெரியப்பாவின்
உறவு விசாரிப்புகள்,
ஆனந்தவிகடனுக்கு அனுப்பிய கவிதை,
கறுப்பு மையில் அச்சிடப்பட்டு யாரோ
காலமான செய்தி,
கறுத்தபசு ஈன்ற கன்றுக்குட்டிக்கு
நெத்திச்சுழி இருக்கும் தகவல்,
புதிரை அவிழ்த்தால் புரியும் காதல்,
ஒடுக்கத்து வெள்ளிக்கிழமை
திருச்செந்தூர் திருநீறு என
அத்தனையும் இழந்துவிட்டு
அனாதையாய் நிற்கிறது அஞ்சல்பெட்டி.
கையடக்கத் தொலைபேசிக்குள்
காணாமல் போய்விட்டது காலம்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்