Wednesday 31 October 2018

தமிழகப் பெருவிழா


  • பன்னிருவர் இன்னுயிரைச்

    சுட்டுப் பொசுக்கி, அவர்

    மன்னுடலும் தாராமல்

    மரமூட்டில் கரியாக்கி,

    வன்கொடுமை செய்த

    வரலாற்றை மறவோமே.

    தனியே கிடந்த

    தமிழ்நிலத்தின் குமரிமகள்

    தாய்வீடு அடைந்த நன்னாள்

    இன்றெனவே மகிழ்வோமே.

    ஆட்சியில் அன்றிருந்தார்

    அதன் பின் அமர்ந்திருந்தார்

    என்றெவரும் கேளாமல்,

    குரங்கு கடித்துவைத்த அப்பத்தின்

    குறும்பங்காய்

    துண்டென இறுதியில் யாம்

    துய்த்திடக் கிடைத்த

    நன்னாடு வாழியவே.

     

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்