Monday 18 February 2019

மண்புழுவின் கவிதை


மகரந்தங்கள் சேகரிக்க வேண்டும்;
மலையேறிக்கொண்டிருக்கிறேன்.
கால்களின் கீழே
ஆறுகள் மரங்கள் தொடுவானம்.

என் தோளில் எச்சமிட்டுவிட்டு
பெயர் சொல்லாமல் பறந்துவிட்டது
ஒரு பறவை.

ஏய்...

உயிரின் வெப்பம் உணர்கையில்
பெயர்கள் தேவையற்றவை;
பாம்பின் குரல்.

விலகிப்போ, உன்னிடம் நஞ்சு
அதனிடம் எச்சம்; நான்
மகரந்தங்கள் சேகரிக்க வேண்டும்;
மலையேறிக்கொண்டிருக்கிறேன்.

ஈரமண்ணில்,
உண்டு செரித்த வளைகோடுகள்.
பாம்பின் மகரந்தம் நஞ்சு,
பறவையின் நஞ்சு எச்சம்,
பூக்களின் எச்சம் மகரந்தம்,
ஒரு பால் கோடாமை
சான்றோர்க்கு அணி.
மண்புழுவின் கவிதை.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்