Tuesday 25 June 2019

வரிக்குக் கட்டிய வரிகள்




காற்றில் அசையும் இலையின் சிலிர்ப்பு
கையோடு உரசும் காற்றின் சிரிப்பு
வானில் பறக்கும் பறவையின் ஓசை
வண்டுகள் பூக்களை வாழ்த்தும் ஒலிகள்
கரையில் மோதும் அலையின் தழுவல்
மலையில் நடக்கும் மேகத்தின் முனகல்
அருவிகள் பாறையில் அடித்திடும் தாளம்
குருவிகள் கூடி இசைத்திடும் குரவை
செண்பகப் பறவையின் கொஞ்சிடும் மிடற்றொலி
செம்புலம் சேரும் மழையின் உயிரொலி
பாலையில் காற்று பரந்திடும் இரைச்சல்
ஆழித் திமிங்கிலத்தின் அழகிய இசைச்சொல்
அசைந்திடும் யாவும் கொடுக்கும் ஒலியில்
இசையும் பிறந்தது இயற்கை மடியில்
இயங்கும் முறைமையும் இயக்கும் இயற்கையும்
மயக்கும் மனதைப் பாட்டாய் மாறி.


(“அசையும் பொருளில் இசையும் நானே” என்ற கவியரசரின் ஒற்றை வரிக்கு பின்பாட்டாய்....)

 




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்