Saturday 18 January 2020

அம்மாக்கள்

ஒற்றைச் சொல்லில்
எழுதப்பட்ட
பெருங்காவியம்.
எல்லோர் வாழ்க்கையும்
சித்தன்னவாசல் ஓவியம்தான்
அவரவர் பார்வையில்.
அதில்,
தூரிகையின்றி
அம்மாக்கள் வரைந்தது அதிகம்.
ஒற்றை விரலால்
மேகங்களை விலக்கி
நிலவைக் காட்டினாலும்,
தங்கள் ஆசைகளை
தங்களோடேயே
உடன்கட்டை ஏற்றிப் போனார்கள்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்