Wednesday 11 March 2020

மா.இராசமாணிக்கனார் பிறந்தநாள் - 2020

(நேரிசை ஆசிரியப்பா)

பள்ளி ஆசிரியப் பணியில் தொடங்கி
பல்கலைப் பேராசிரி யராய் விரிந்து
ஆய்வு நூல்களின் கொடு முடியென
அருமை நூலொன்று செய்து கொடுத்தவரே
பத்துப் பாட்டல்ல அது தமிழர்தம்
சொத்துப் பாட்டென்று சொல்லிக் கொடுத்தவரே
உண்மையின் மீது கொண்ட வேட்கையில்
ஊரெல்லாம் நடந்து வரலாறு தெளிந்தவரே
நெடுநுகத்துப் பகல் போல நின்று
தமிழ்த் தாத்தாவின் தவறையும் இந்தத்
தமிழகம் அறியச் சுட்டிச் சென்றவரே
உம்பணி ஒளித்து வைத்த கயவரும்
தன்னிழல் மீதே வீழ்ந்து மாய்ந்தார்
உம்மை அறிவார் இனி தமிழர்
தம்மை அறிவார் தமிழறிவார்
உய்த்தெழட்டும் உம் நினைவால் இனமே.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்