Tuesday 5 March 2019

ஓடுமீன்

முதலைகளின் பல்லிடுக்குகளில்
சேகரித்த
சதைத் துணுக்குகள் கோர்த்து
தூண்டில் வீசிக் காத்திருக்கின்றன
விலாங்கு மீன்கள்.

அந்தப்
புலவு நாற்றம்
புழுதியோடு சேர்ந்து
கனவு கலைத்த மண்ணில்,
உறுமீன் மட்டுமின்றி
ஓடுமீன் அனைத்திற்கும்
காத்திருக்கின்றன கொக்குகள்.

தப்பித்தவறி
நீர்வரும் காவிரி
ஓடும் மண்ணில்,
எப்போதோ
பட்டென்று வாழ்வைச் சாய்த்துவிட்ட
கசாபுயல் கடந்த மண்ணில்,

தப்பாமல் தவறாமல்
எப்போதும் வருகிறது
தேர்தல்.

கடலலையும் மீன்களென
தற்சார்போடு இருங்கள்.
காவிரி நீர் வந்து
கல்லணை தழுவும்.

தூண்டிலைக் கவ்வாதிருங்கள்.
கண்டிப்பாய் துளிர்த்தெழும்
கசாபுயல் சாய்த்த மரம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்