Friday 11 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 2. கொம்பு

 Image may contain: text that says 'கொம்பு தமிழாடும் முன்றில்'

 

பண்டைய நாள்களில் மன்னர்களின் வருகையையும், தமிழர் கோயில்களில் இறைவனது வருகையையும் அறிவிக்கும் விதமாக இசைக்கருவிகளில் முதல் வரிசையில் நின்று ஊதப்பட்டது கொம்பு. முதலில் "சங்கு" முழங்க தொடர்ந்து கொம்பின் பேரோசை நகரெங்கும் நிறையும். கால ஓட்டத்தில் காணமல் போன, அல்லது சில குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே காணக்கிடைக்கும் கருவியாகிப் போனது கொம்பு. மீண்டும் அது நம் வாழ்வியலுக்குள் வரவேண்டும்.
கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.
============================================
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்/
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்/
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி/
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்/ 12.0654
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க/
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்/
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று/
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்/ 12.2182
. :- பன்னிரெண்டாம் திருமுறை 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்