Tuesday 4 December 2018

அமைதி

பெருமழை ஒழிந்த நாளில்,

பெருநகரொன்றின் பேரிரைச்சலில்,

வெயிலேற்று வீடு திரும்பி,

கதவடைத்த அடுக்ககத்தில்

காற்றுப் புகா தனியறையில்,

விரும்பித்

தேடுகையில் தொலைந்துபோகும்

அரும் பொருளே
மன அமைதி.