Saturday 17 December 2022

கன்னத்தில் அறைந்த காலம்



இன்று கண்விழிக்கும் போதே பறையொலியும், சங்கொலியும் கேட்டன. சோகத்தின் ஈனக்குரலாய் இடையிடையே மணியொலியும். யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு கதவைத் திறக்க முனைகையில், துணைவியார்...

"பக்கத்து வீட்டுக்கெல்லாம் தண்ணிக் கேன் போடுறான்ல அந்தப் பையனோட மனைவி இறந்துட்டாங்களாம்" 
 
"என்னாச்சு திடீர்னு?... வயசு குறைவுதானே?"
 
"ஆமா. நாப்பது வயசு போல தான் இருக்கும். ரெம்ப நாளாவே கேன்சர் இருந்துதாம்"
 
"அப்படியா?"
 
"ஆமா.. பாவம் ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க வேற"

பட்டென்று யாரோ இடது கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. மனம் பின்னோக்கி ஓடத் தொடங்கியது.

Sunday 11 December 2022

பாரதி எனும் பெருவியப்பு!

 

நாட்டு நலம் உரைத்த நல்ல

பாட்டுத் திறக்காரன் நீ!

வேட்டல் விடுதலை யென்ற

தேட்டை வளர்த்தவன் நீ!

ஏட்டுக் கவிகளிடை நல்ல

பாட்டுப் பெரும்புலவன் நீ!


கூட்டுப் புழுக்கள் என்றே வீட்டில்

பூட்டிக் கிடந்த பெண்கள்

Saturday 10 December 2022

மணநாள் 2022

 


நீ,

தூசி தட்டுகிறபோதும்

இசைக்கிறது யாழ்.

 

அடிக்கடி நடக்கும்

சின்னச் சண்டைகளால்

அகத்திணைக்குள் மட்டும்

அடங்காது

புறத்திணைக்குள்ளும்

முகங் காட்டும்

நம் காதல்.

 

ஆனாலும்,

உன்

காதல்வரி தீராது

காதுகள் நிறைய;

கானல்வரி பாடாது

கழிந்தது என் காலம்.

 

மறுபிறப்பு இல்லையெனும்

அறிவியலைத் தள்ளிவைத்தேன்.

பிறப்பறுக்கும் பெருங்கருத்தை

வெறுக்கின்றேன் உன்னாலே.

இன்னொரு முறையும்

இந்த வாழ்க்கைக்

கிடைக்குமென்ற ஆசையிலே.