Sunday 30 October 2022

முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள் 2022

 


கதிரவனை விரல்களால்

மறைத்துவிட நினைத்தன

கைகள்.


 இமயத்தை நிழலால்

மூடிவிட எத்தனித்தன

இலைகள்.


விளைந்த பொன்னை

வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது

காலம்.


 நல்லவை கொண்டால்

நலம்பெறுமே நாடு.


Friday 28 October 2022

உள்ளொன்று புறமொன்று

 


 

கட்டியணைத்து அந்தக்

கதிரவன் முதுகைத்

தட்டிக்கொடுக்க ஆசை.

விரல்கள் என்னவோ

தீக்குச்சி நெருப்பையே

தீண்டுவோமா என்கின்றன.

 

ஓட்டமாய் ஓடி இந்த

உலகப்பந்தின் நேர்நிரைக்

கோடுகள் கடந்துவிட ஆசை.

கால்கள் என்னவோ

சாலை கடக்கவே

தடுமாறுகின்றன.

 

துள்ளிக்குதித்து அந்தக்

கடலில் முழுதாய்

பள்ளி கொண்டுவிட ஆசை.

உடல் என்னவோ

ஒருவாளி நீருக்கே

உதறல் எடுக்கிறது.

 

இறுதிப்புள்ளி அறிந்திராதப்

பெருங்கோலமாய்,

ஒவ்வொரு நாளும்

இருவேறு வாழ்க்கை;

உள்ளொன்று புறமொன்று.


Wednesday 26 October 2022

மருதிருவர் தூக்கிலிடப்பட்ட நாள்

 



நேர்நின்று எமை மாய்த்தவர்
அரிதினும் அரிதே.
சேறுழலும் கேழல் மனம்
ஊழ் நின்று வேரறுக்கும்
இரண்டகத்தின் சான்றாக,
தூக்குக் கயிறுகளும்
துவக்குகளும்.
ஊடாடி உயிர் குடித்த
பல நாளில்
ஒரு நாள் இன்று.

==========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
24-10-2022
==========================

Saturday 15 October 2022

மூன்று செய்திகள்: ஒரு கவிதை

 


மூன்று செய்திகள்: ஒரு கவிதை.


மீத்தேனை வெல்லுதல்: காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மீத்தேன் உமிழ்வைத் தடுப்பது ஏன் முக்கியமானது?

இந்தியாவில் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள் பெரும்பாலும் விவசாயத் துறையில் இருந்து பதிவாகியுள்ளன, ஏனெனில் கால்நடை உர மேலாண்மை மற்றும் விவசாயம் ஆகியவை மீத்தேன் ஆதாரங்களாக உள்ளன" என்று, பெங்களூருவை சேர்ந்த சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் (CSTEP) காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையின் துறைத் தலைவர் இந்து மூர்த்தி,

Wednesday 12 October 2022

வேள்பாரியைக் கொன்றது மூவேந்தர்களா?

 


===================

கதையல்ல வரலாறு

===================

வேள்பாரியின் இறப்புக்குக் காரணமான மூவேந்தர் குறித்து எனது பதிவும், அதற்கு பின் ஐயா சி.அறிவுறுவோன் அவர்களுக்கும் எனக்கும் நடந்த சிறு தருக்கமும்.

பறம்புமலையின் வேள்பாரி இறந்துபட்ட பின் பாரியின் அணுக்கத் தோழனும் பெரும் புலவருமான கபிலர் சென்ற முகாமையான இடங்களில் ஒன்று செல்வக் கடுங்கோ வாழியாதனின் கருவூர். சேர நாட்டின் தலைநகரம். சேரப்பெருவேந்தன் கடுங்கோவைப் பார்த்து அவர் பாடிய பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தில் இருக்கின்றன. அதில்

Sunday 9 October 2022

இல்லாதது எது?

 


இந்த முறை ஊரிலிருந்து திரும்புகையில்போச்சுல இதயெல்லாம் கொண்டுபோஎன்று சில பொம்மைகளைத் தந்தார் அம்மா.

நாஞ்சிநாட்டிலிருந்து வணிகத்திற்காக திருவனந்தபுரத்திற்குப் பண்டு நகர்ந்த கூட்டத்தின் கிளையில் பூத்த மலர் அவர். அங்கு குடியேறிய பலர் புரட்டாசியில் கொலு வைப்பதைப் பழக்கமாக்கி விட்டிருந்தார்கள். நான் சொல்வது இருநூறு ஆண்டு கதை. அப்படிப் பழக்கமான அம்மாவின் வருகைக்குப் பின் தான் எங்கள் தாழக்குடி வீட்டிலும் பொம்மைகள் கொலுவேறியிருக்கின்றன. அதற்கு முன் அந்தப் பழக்கம் எங்கள் பாட்டி குடும்பத்தில் இல்லை.

கொலு வைப்பதோடு சேர்ந்த ஒரு கொசுறான பழக்கம், தங்கள் குழந்தைகளுக்கு வழிவழியாகப் பயன்படுத்தும் பொம்மைகளில் சிலவற்றைத் தருவது. அப்படித்தான் சில பொம்மைகள் என் கைக்கு வந்து சேர்ந்தன.

Thursday 6 October 2022

எட்டி! எட்டி !



சித்த மருத்துவரும், எழுத்தாளருமான ஐயா முத்துநாகு அவர்கள் 04-10-2022 அன்று எட்டிப்பழம் பறித்த நிகழ்வைப் படங்களோடு பதிவிட்டிருந்தார். படத்தில் வழமைபோல முழு கால்/கைச் சட்டையோடு காட்சிதந்தார்.

அதன் கீழே ஒருவர் "எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன" என்று பழமொழியொன்றைக் குறிப்பிட்டிருந்தார்.
எட்டி.. எட்டி.. சட்டி புட்டி என சில சொற்கள் மனத்துள் ஓடின. வைத்தியரோடு வம்பிழுக்கும் பாட்டாக்களின் நாட்டுப்புற மொழி மரபு தோன்ற ஐயாவைக் குறித்து சிறு பாட்டொன்று எழுதினாலென்ன என்று தோன்றியது.

Wednesday 5 October 2022

வள்ளலார் 200

 



ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்/

பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்/

மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்/

யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.'/ :-

(உய்வகை கூறல் - வள்ளலார்)

தருக்கம் மனிதகுலத்தின் பெருஞ்சொத்து. சரி அல்லது தவறு என்பதே தருக்கத்தின் படி இறுதி செய்யப்படவேண்டும். மனிதன் என்று தொடங்கும்போதே குறைந்தது ஐம்பதினாயிரம் ஆண்டுகளையாவது நாம் மனதில் உருவகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மனிதன் பலவாறான சிந்தனைக்கு ஆட்பட்டவன். இல்லையென்றால் 

Tuesday 4 October 2022

தஞ்சைப் பத்து

 


தஞ்சைப் பெருவுடையார் கோவிலின்

ஒரு நாள் பொழுது.


காலம் : இராசராசன் காலம்

சான்று : கல்வெட்டு + திருவிசைப்பா

குறிப்புகள் அளித்தவர் : திரு தென்னன் மெய்ம்மன்


விடியற்காலையில் யாழ் ஒலி சிலம்பும். வட சிறகு தென் சிறகு வீடுகளில் இருந்து தளிச்சேரிப் பெண்டுகள் நாயகஞ் செய்து அழைத்து வரப்படுவர். உடுக்கை கொட்டு மத்தளம் சக டை இவற்றோடு நாடக சாலை என்ற முன் மண்டப மேடையில் விலங்கல் செய்து ஆடுவார்கள்.சிங் கடி வேம்பி மழலைச் சிலம்பி என்பன அவர்களின் பெயர்களுள் சில.


இவர்கள் ஆடக் கூடிய பகுதிக்கும் கருவறைக்கும் இடையில் 

 .


ஆ → ஆய் → ஆய்தம்

ஆய்தல் = நுனுகுதல், சிறுத்தல், கூர்மையாதல் ஆய்தம் = நுணுகக் கூராக்கப்பட்ட கத்தி அல்லது படைக்கலம். (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி)

“மாணார்ச் சுட்டிய வாள் மங்கலமும்” (தொல்காப்பியம்)

பகைவரை அழித்த வாளின் வெற்றியைக் கொண்டாடுதல் அல்லது போற்றுதல்.

"மங்கல மொழியும்" (தொல்.பொருள்.244)
"மங்கலமென்ப மனைமாட்சி" (குறள், 60)

"மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த/
கொற்றவை நிலையும் அத்திணை புறனே"
என்றதால். தாய்வழிக் குடி கொற்றவைக்குக் கூறப்பட்டுள்ளது. மேலும் மறம் என்பது ஆகுபெயர் மறம்பொருந்திய மறவரை மூதில் முன்றிலில் கூட்டுதல் குலம் அல்லது இனக்குழுத் தலைவியின் வேலை. அதைச் செய்பவள் கொற்றவை!