Sunday 12 May 2024

வடந்தைத்தீ - Aurora Borealis




வடந்தைத்தீ vaḍandaittī, பெ. (n.) வடதிசை நெருப்பு (L.);; aurora borealis.


"சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்" (காஞ்சிப்பு. இருபத்.384);.

[வடம் → வடந்தை + தீ = வடதிசை நெருப்பு அல்லது வட வைக்கனல் (வ.மொ.வ.2 பக்.78);. வடந்தை = வடக்கிலுள்ளது. வடக்கிலுள்ளதாகக் கருதப்படும் கனல்.

==================

தமிழர் வரலாறு நூலில் பாவாணர் கூற்று வருமாறு:

படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். "மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன்" (திருமந். 2031).

பரவன் - பரதவன் = 1. மீன் பிடிப்போன். "மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). "திண்டிமில் வன்பரதவர்" (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். "தென்பரதவர் மிடல்சாய" (புறம். 378).

பரதவன்-பரதன்=1. மீன்பிடிப்போன். "படர்திரைப் பரதர் முன்றில்" (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. "பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2). 3. வணிகன். "பரத குமரரும்" (சிலப். 5:158).

பரதவர் கடலோடிகளும் (Mainers) சுற்றுக் கடலோடிகளுமாய் இருந்ததனால் (Circumnavigators), வடதிசைச் சென்று

Saturday 11 May 2024

ஆடிக் களிக்கும் தமிழ்



 

ஆடு āṭudal, செ.கு.வி. (v.i.)

 

 

 

1. அசைதல்; to move, to wave, to swing, to shake, to vibrate.

 

2. கூத்தாடுதல் (பிங்.);; to dance, to gesticulate, to play.      "அம்பலத்தாடுவான்" (பெரியபு. கடவுள் வா);.

 

3. விளையாடுதல்; to play.  "அகன்மலையாடி" (மணிமே. 10:55) 

 

4. நீராடுதல்; to bathe, to play in water.

 

5. அசைந்தாடுதல், மென்மெல அசைதல்; to sway. தென்றலில் பூங்கொடி அசைந்தாடுகிறது.

 

6. ஆலையாடுதல், ஆலையிலிட்டு அரைத்தல்; to crush in a machine இன்றுதான் கரும்பு ஆலையாடி முடிந்தது.

 

7. இணலாடுதல்-புணர்தல்; to copulate, as snake do. பாம்பு இனலாடுகிறது.

 

Thursday 11 April 2024

தமிழர் வானியல் - பாரதி

 



தமிழர் வானியல்

 

 வாழ்வில் சில தவறுகள் திருத்த இயலாதவையாக, காலத்தே பயிர் செய்யாது கவலையுறும் உழவனின் ஆற்றாமையைப் போல உள்ளத்தை வாட்டுகின்றன. இதுவும் அப்படியான ஒன்றுதான்.

திருச்சிராப்பள்ளி நண்பர் மறைந்த தி.ம.சரவணன் அவர்களை நாள்தோறும் மாலை நடைப்பயிற்சியின் போது பெரும்பாலும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பலவாறும் உரையாடுவோம். நான் சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு சந்திப்புக் குறைந்து தொலையொலிவியில் (Phone) உரையாடல்கள் தொடர்ந்தன. இடையே எனது முதல் நூலை அவரது கலைநிலா பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டோம்.

நூல் வெளியிட்ட 2018 ஆம் ஆண்டிலேயே அவரது உடல்நலம் சீர்கெடத் தொடங்கியிருந்தது. உடல் வலியும் உளவலியும் அவரை இயல்பினின்று பேரளவு மாற்றியிருந்தன. முகாமையாகச் செய்துகொண்டிருந்த எழுத்துப் பணியைக் கூட நிறுத்தியிருந்தார்.

அப்படியான ஒரு நாளில் சென்னையிலிருந்து சென்று அவரைச் சந்தித்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை 

Saturday 9 March 2024

எப்போதும் வருகிறது தேர்தல்



முதலைகளின் பல்லிடுக்குகளில்

சேகரித்தச்

சதைத் துணுக்குகள் கோத்து;

தூண்டில் வீசிக்

காத்திருக்கின்றன

விலாங்கு மீன்கள்.


உறுமீன் மட்டுமின்றி

ஓடுமீன் அனைத்திற்கும்

ஒற்றைக் காலில்

காத்து நிற்கின்றன

கொக்குகள்.


எப்பொதோ பார்த்த மலை

எப்போதோ நீர்வந்த ஆறு

எப்போதோ காற்றடித்தக் காடு.


ஆனால்,


தப்பாமல் தவறாமல்

எப்போதும் வருகிறது

தேர்தல்.


தூண்டிலைக் கவ்வாதிருங்கள்.

அங்கே தொங்குவது 

நம் சதைதான்.

Tuesday 5 March 2024

காற்றே வா வா - ஓர் உழுகுடிப் பாட்டு

 



வேளாண்மையில், வாழ்வியலில் நீருக்கு இணையானது காற்று. 

காற்றை வரச்சொல்லி ஓர் உழுகுடி வாழ்வியல் பாட்டு.


பாடலாசிரியர் : சிராப்பள்ளி ப.மாதேவன் 

இசை : இராபர்ட் - முத்துக்குமாரசாமி 

பாடியவர்கள் : ஆகாசு சங்கர், கௌரி, சுவேதா. 

ஒளிப்பதிவு & ஆக்கம் : சிராப்பள்ளி ப.மாதேவன்


தாழக்குடி, ஔவையாரம்மன் கோயில், தோப்பூர், ஆண்டித்தோப்பு,  பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, தேரூர், குறிச்சி, வீரநாராயணமங்கலம், தெள்ளாந்தி முதலிய நாஞ்சில்நாட்டுப் பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப்பெற்றது.

=============================


காற்றே வா வா

(கலித்தாழிசை)


தரவு


தாடகை மலை மேலே

தாழஞ் செடி மேலே

நல்ல மணம் தேடும் காற்றே வா

காற்றே வா காற்றே வா

காற்றே வா காற்றே வா வா.