Sunday 21 August 2022

நாகர்கோவிலும் சிந்துச்சமவெளியும்

 


ஆவணி மாதம் பிறந்துவிட்டாலே “மக்ளே எட்டரை காருக்கு நாரம்மன் கோயிலுக்குப் போலாமா?” என்ற ஆச்சியின் குரல் கேட்பதற்காகக் காத்துக் கிடக்கும் உள்ளம். ஆவணி மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருக்கும் நாகரம்மன் / நாகராசா கோவிலுக்குப் போவதென்பது குமரி மக்களின் நெடுநாளைய வழக்கம்.

தூக்கு வாளியில் அல்லது குப்பிகளில் பாலைச் சுமந்து சென்று அங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான நாகச் சிலைகளின் மீது ஊற்றி வழிபடுவதும், உள்ளே கருவறையில் தரப்படுகிற ஈரமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வதும், விளாங்காய், பேரிக்காய், பப்ளிமாசு போன்றவற்றை வாங்கிச் சுவைப்பதும் என சிறுவயது ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் மகிழ்ச்சி நிறைந்தவை.

சிறுவயது முதலே அங்கு செல்லும்போது மட்டும் 

Thursday 18 August 2022

நெல்லை கண்ணன் மறைவு

 


வாழ்வின் சிறப்பதனை

வறுமை விழுங்கிட,

கலந்து கூடி கண்ணன் ஆடிய

தொழுநையாறென;

தன்முகம் தொலைத்து

கடல்முகந் தொடாது,

ஓடும் ஆற்றில் கலந்து மறைந்தாய்.


18-08-2022

Saturday 6 August 2022

நீங்களாய் நிறைகிறேன்

 


 உணர்வு நீர்ச்சுருளை
முகந்த மேகங்களாயின
என் கவிதைகள்.

சில வேளைகளில்
சிந்தும் துளியால்
உங்கள் உள்ளம் நனைக்கலாம்.

பல வேளைகளில்
மழையைச் சொரியாமல்
கடந்து மறையலாம்.

வெயிலை மறைத்து
வேனல் குறைக்கலாம்.

யாரும் நடந்திராத
பாலையில் பொழியலாம்.

அலைகளில் வீழ்ந்து
ஆழ்கடல் கலக்கலாம்.

மலைகளில் கசிந்து
மரங்களைக் கூடலாம்.

ஒவ்வோர் உள்ளத்திலும்
வெவ்வேறு
உருவங்கள் காட்டலாம்.

என்னைப் படிக்க
புத்தகம் தேடாதீர்.