Monday 21 June 2021

பிரிவு

 


. =============
. பிரிவு
. =============

பிரிவின் ஓசை
பேரமைதி.

பிரிவின் எழுத்து
யாரும் அறியாது;
இருட்டில் வரைந்த
கறுப்பு ஓவியமாய்
இதயத்தில் விழுந்த கீறல்.

பிரிவென்பது;
காற்று நடக்கும் பாதையொன்றில்,
மேகத்தை அடையாளம் வைத்து
ஊர் செல்லும் ஏதிலியின்
ஒரு வழிப்பாதை பயணம்.

======================
படம் உதவி இணையம்
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
21-06-2021
======================

Wednesday 16 June 2021

காக்கா கதை


 வானம் இருண்டுகொண்டுவந்தது. தொலைவில் மெல்லிய மின்னல் கீற்றுகள் பளிச்சிட்டன. மண்ணிலிருந்து வெப்பம் மெல்லக் கிளம்பியது. உடலில் சூடு படுவதை உணர்ந்த அந்தக் காக்கை தன் கூடு நோக்கிப் பறக்கத் தொடங்கியது. காட்டிலிருந்த எல்லா காக்கைகளும் வரத்தொடங்கியிருந்தன.  கூடவே கிளிகளும், கொக்குகளும், ஒன்றிரண்டு குயில்களும். 

அந்த வேப்பமரத்தில் ஏராளமான உயிர்கள் வாழ்கின்றன. அதன் வயது யாருக்கும் தெரியாது. அது எத்தனையோ உயிர்கள் முட்டையின் ஓடு உடைத்துப் பிறந்ததை,  வயதாகி கிளையிலிருந்து வீழ்ந்து மடிந்து எறுப்புகளுக்கு உணவாகிப்போன பறவைகளை, தன்மீது ஊர்ந்துகொண்டிருக்கும்போதே குருவிகளால் கொத்தித் தின்னப்பட்ட புழுக்களை, காக்கைகளைத் துரத்தும் அணில்களை, உதிர்ந்துகிடக்கும்  சின்னக் குச்சிகளை எடுத்துச் செல்லும் புறாக்களை, வெயில் கொதிக்கும் வேளைகளில் தன் நிழலில் தங்கிச் செல்லும் ஆடு மாடுகளைப் பார்த்திருக்கிறது. ஆனாலும் அங்கே ஏராளம் வதிபவை காக்கைகளே.

Thursday 10 June 2021

கண்ணுக்குத் தெரியாத போதிமரம்

 

ண்டா? இல்லையா? என்ற வினாவின் கருப்பொருளாக, கடவுள் மட்டுமன்றி இந்தக் கொரோனாவும் சேர்ந்துகொண்டதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெருவியப்பு. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கொண்டு, ஆகக் குழம்பிய நிலைக்கு அறிவியலைத் தள்ளியதும் இதுவே.

சரி. போகட்டும். நான் சொல்ல நினைப்பது அறிவியல் குறித்தல்ல.

ண்பர் ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். பத்து நாள்களில் தொற்றிலிருந்து விடுபட்டாலும், உயிர்வளி அளவுகள் சரியில்லை என்று மருத்துவமனையிலேயே தொடர்ந்தார்.  அவருடன் அவரது தம்பி ஒருவர் மட்டுமே துணையாக இருந்தார். ஒருநாள் மூச்சு திணறத் தொடங்கியிருக்கிறது. "வலி தாங்க முடியவில்லை" என 

மருத்துவரை நம்பணும்


 
"ஏன்னா எனக்கு தெரியாது...
தெரியாத ஒன்றை தெரிந்ததைப் போல சொல்லும் பழக்கம் எனக்கில்லை..." தம்பி யின் பதிவில் இருந்த இந்த சொற்றொடர் எனக்கு ஊர் நினைவொன்றை மீட்டியெழுப்பியது.

எங்கள் ஊரில் (கீழூரில்) ஒரு சித்த மருத்துவர் இருந்தார். நிறைய சிக்கலான நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்துகளை செய்து தருவார். நல்ல வசதியாக இருந்தவர் என்று சொல்வார்கள்.ஊரில் ஏராளமான பேர் அவரை "கொஞ்சம் சிடு மூஞ்சி" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
 
ஆனால், அப்பாவின் நெருங்கிய நண்பர். அப்பா நிறைய பேருக்கு அவரிடம் மருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே எனக்கு நான்கு ஐந்து சித்த மருத்துவர்களைத் தெரியும். என்னோடு ஏராளமான செய்திகளைப் பரிமாறிக்கொண்ட மருத்துவர்களும் உண்டு.

இவரிடம் இருந்த உயர் குணங்களாக மூன்றைச் சொல்லுகிறேன்.
 
1. மருத்துவத்தின் மீதும் மருந்தின் மீதும் தன்மீதுமான நம்பிக்கை.

2. நோயாளியிடம் உரையாடி பரிசோதித்த பின் "நாளைக்கு மருந்து செய்து தாரேன்." என்பார். மறுநாள் மருந்தோடு வருவார். "வைத்தியரே.. எவ்வளவு?" என்று கேட்கும் போது; 
வசதியானவர்களாய் இருந்தால் "கடைச் சரக்கு மட்டுமே 50 ரூவா ஆச்சு.." என்பார். அவர்கள் 75 ஓ 100ஓ கொடுப்பார்கள். வாங்கிக் கொள்வார்.
ஏழைகளாய் இருந்தால்: "மருந்துக்கு ஆன செலவச் சொன்னா குடுத்துருவியா? பெரிய இவன் மாதிரி கேக்குற. இருக்குறத குடுடே" என்பார். 5 ரூபாய் கொடுத்தால் கூட வாங்கிக் கொண்டு சென்று விடுவார்.

3. இதற்கிடையில் ஒன்று நடக்கும். அதுவே அவரது ஆகச் சிறந்த குணமாக நான் பார்க்கிறேன். (ஆனால் ஊர் அதைத் தான் "சிடுமூஞ்சி" என்று சொல்லும்).

எடுத்துக்காட்டாக ஒருவர் கண்ணில் ஏதாவது பிரச்சனை என்று மருந்து கேட்டிருப்பீர்கள். செய்து எடுத்துக் கொண்டு வருவார். அவருக்கு முன்னால் வந்ததும், 
 
"இதான் உன் கண்ணுக்கு மருந்து. இதப் பாரு இப்படி ரெண்டு சொட்டு கண்ணில் விடணும்" என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கண்ணில் இரண்டு சொட்டு மருந்தை விட்டுக்கொள்வார். பிறகு குப்பியை அவரிடம் நீட்டுவார்.

"கண்ணுல விட்டா வேற ஒண்ணும் செய்யாதில்ல வைத்தியரே.. நல்லா கொணமாயிரும்லா." என்று நம்மாளு வழக்கம் போல கேட்டு விட்டால் அந்தக் குப்பியைப் பிடுங்கி ஓங்கி தரையில் அடித்து உடைத்துவிட்டு (அப்ப எல்லாமே கண்ணாடிக் குப்பிகள் தான்), அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார்.

ஏன் இப்படிச் செய்கிறார் என்று அப்பாவிடம் கேட்டால் "மருந்த நம்பணும்டா, வைத்தியன நம்பணும்டா.." என்று சொல்வார்.

அவரது மருத்துவத்தின் சிறப்பை பல முறை நேரில் கண்டிருக்கிறேன். 

நினைவைக் கிளறிய தம்பிக்கு நன்றி.