Friday 12 March 2021

நன்றி! நன்றி! நன்றி!

   


எப்பொழுதும் புத்தகங்களைத் தேடிப்போன அந்த அரங்கத்திற்கு வாசகர்களைத் தேடிப்போன முதல் பயணம், வாழ்வின் சிறந்த நிமிடங்களை அள்ளி வழங்கியது. முதலில்; பாவாணந்தம் அரங்கைப் பார்வையிட்ட, ஆதரவு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 

 கொரோனா தடைக்காலத்தில், இணையத்தில் பேசுவதற்காகத் தொடங்கப்பெற்ற “பாவாணந்தம் இலக்கியக் குழுமம்” “பாவாணந்தம் வெளியீட்டகமாக” மாற்றம் பெற்றது குறுகிய கால வரலாறு. தமிழர் திருமணம் குறித்தான “பல்லாயிரங் காலத்துப் பயிர்” என்ற அதன் முதல் வெளியீடும்; நூலின் மீதான மதிப்புரைகளும் பார்வைகளும் அடுத்தடுத்த வேலைகளுக்கான உறுதியைக் கொடுத்தன. மளமளவென வேலைகள் நடந்தன.
 
   பொருநராற்றுப்படை - கதையுரை, மணற்கேணி - வள்ளுவர் சொல்லாடல், முற்றாக் காதல், பல்லாயிரங் காலத்துப் பயிர் மற்றும் எனக்கென ஒரு வானம் நூல்களோடு அரங்கில் புகுந்தோம். புதிய வெளியீட்டகமான எங்களுக்கு வாய்ப்பளித்த பபாசிக்கு (BAPASI) மிக்க நன்றி.
 
    பேரறிஞர்களின் தோள்களில் ஏறி, திருவிழாக் காணும் குழந்தையாக வலம் வந்த என்னை