Wednesday 30 December 2020
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
தமிழர் மணம்
ஆன்றோர் கேட்கை அறிவின் தாக்கோல்
தண்டமிழ்ப் பாவை - பாடல்
தமிழர் இசைக்கருவிகள் - 10 தண்ணுமை
Monday 14 December 2020
தமிழர் இசைக்கருவிகள் - 9 . குடமுழா / குளிர்
Friday 11 December 2020
தமிழர் இசைக்கருவிகள் - 8 . தடாரி
தமிழர் இசைக்கருவிகள் - 7 . எக்காளம் / நமரி
தமிழர் இசைக்கருவிகள் - 6 . யாழ்
தமிழர் இசைக்கருவிகள் - 5 . தக்கை
மெல்ல உருப்பெற்ற குமுகத்தில், இருபுறமும் தோல் இழைத்து உருவாக்கப்பட்ட பறையாக தக்கை பிறந்திருத்தல் வேண்டும். இன்றைய "தவிலுக்கு்" தாத்தா போன்ற தோற்றம். இதன் இசை நடையும் ஒத்திசைவும் பறையைப் போலவே இருக்கிறது. பறையொலிகேட்டால் எப்படி உள்ளூர மனம் ஆடுமோ அதுபோலவே இந்த “தக்கையும்” நம் மெய்ப்பாடுகளில் மாற்றம் செய்கிறது.
தமிழர் இசைக்கருவிகள் - 4 . பறை
தமிழர் இசைக்கருவிகள் - 3. குழல்
தமிழர் இசைக்கருவிகள் - 2. கொம்பு
தமிழர் இசைக்கருவிகள் - 1. சங்கு
Sunday 6 December 2020
நீலமலைக் காதல்
எயினி, சளவோலையால் வேயப்பட்ட குடிலின் படலை மெல்லத் திறந்தாள். கீழை வானத்தில் கதிரவனின் தலை தெரிந்தது. வெளியே விரிந்துகிடந்த நீலமலை தன் பெயருக்கேற்ற வண்ணத்தில் ஆடை கட்டியிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் நீலக்குறிஞ்சி பூத்துக் குலுங்கியது. மெல்லிய மழைத்துளிகள் பூக்களின் மேல் ஒட்டியிருந்தன. குளிர் காற்று வீசியது. மெல்ல நடந்து குடிலின் அருகே இருந்து ஒரு குறிஞ்சிமலரைப் பறித்தாள். போர் அயரும் முருகனின் கையிலிருந்த மணிபோல இருந்தது அது. நேற்று மாலை…
“ஆறு தடவை குறிஞ்சி பார்த்துவிட்டேன். எனக்கும் வயதாகிறது. நாடுகாவலை வேறு யாரேனும் எடுத்துக்கொண்டால் சிறப்பு.” என்று நாட்டுக் கூட்டத்தில் மூப்பன் சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு.
குறிஞ்சிதான் இந்த மலையின் சிறப்பு. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிதான் எத்தனை அழகு, அவனைப் போலவே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
“அடியேய் என்ன அங்க ஒத்த பூவ கைல வச்சு வெறிச்சு வெறிச்சு பாக்குற. அதுதான் மலை பூராவும் பூத்துக்கிடக்கிறதே… ம்…” என்ற குரல்கேட்டு தலையுயர்த்தினாள் எயினி. வள்ளி வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்தபின் தான் எயினியின் களிப்பு வள்ளிக்குப் புரிந்தது.
“என்னடி மகிழ்ச்சி அருவியா பொழியுது போல”
“இல்லையே… இந்த பூவின் தேனை உறிஞ்சினேன். அதன் சுவையின்பம் ஒருவேளை என் முகத்தில் தெரிகிறதோ என்னவோ?”
Friday 4 December 2020
திருமுருகாற்றுப்படை - குறிப்புரை
தமிழர் தம் சொத்துப்பாட்டு எனப்படும் பத்துப்பாட்டில் முதலாவது பாட்டு திருமுருகாற்றுப்படை. இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். வழிபட விரும்புவோரை முருகனிடம் ஆற்றுப்படுத்துவது இந்நூல். இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார்.
இது 317 அடிகளைக் கொண்ட நீண்ட அகவற்பாவாகும். குறிஞ்சியின்
சிறப்புக் கடவுளை மலை ஒன்றைச் சிறப்பித்துக்கூறி. அம்மலைக்கு
உரிமை பூண்ட முருகன் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திரு ஆவினன்குடி, திரு ஏரகம் என்னும் நான்கு சிறப்புடைத்
தலங்களில் எழுந்தருளியுள்ளான் என்று உரைக்கிறது. (அறுபடைவீடு
என்று சொல்லப்படவில்லை)
முருகன் உறையும் இடங்கள், அவன் பழந்தமிழ் மண்ணில் வழிபடப்பட்ட முறைகள், வெறியாட்டு, முருகன் அருள்புரியும் திறம் இவற்றைக் கூறுகிறது. அவன் குன்றுதோறாடல் கொண்டவன் என்றும் குறமகள் ஒருத்தி செய்யும் முருக வழிபாடும் கூறி, புதிதாக வழிபடுவோர் எப்படி வழிபடவேண்டுமென்றும் உரைக்கிறது.
வைப்பு முறையால் மற்ற ஆற்றுப்படை நூல்களிலிருந்து வேறுபடுகிறது.
===================================
திருமுருகு ஆற்றுப்படை
(மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்)
முருகன்
உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக, பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, ஒழிவு இல்லாமல் மின்னும் இமையாது ஒளிரும் ஒளியையுடைய, தன்னைச் சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும், கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும், குற்றமற்ற கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன் ஆவான் முருகன்.
சூலுற்ற மழைமேகங்கள் வானத்தில் வாள்போல் மின்னி வளம்தரும் மழைத் துளிகளைப் பொழியும். கோடைக்குப் பிறகு பெய்யும் அந்த முதன் மழையால் கானம் இருண்டு பசுமையாகும் .வெண்கடம்பு மரங்கள் தழைத்துப் பூத்துக் குலுங்கும். அப்பூக்களால் கட்டப்பட்ட தார்மாலைகள் புரளும் மார்புக்குச்
Friday 25 September 2020
காற்றாக...
முதல் பாடலிலேயே
முழுமையடைந்தவன் நீ.
க ச ட த ப எனும்
வல்லோசை கொண்டு
இசைக்கு மொழியில்லை
என்பது பொய்யென;
இசைத்துச் சொன்னவன் நீ.
மேனி நோகாமல்,
மெல்லிசையால்
உள்ளம் கொன்றவன் நீ.
உணர்வற்றுக் கிடக்கையில்
ஒற்றைச் சிரிப்பால்
உயிர்ப்பித்தவன் நீ.
என்
காதலின் ஓசையாய்,
காமத்தின் தவிப்பாய்,
மகிழ்ச்சியின் தூறலாய்,
வருத்தத்தின் இறுக்கமாய்,
தனிமையின் தோழமையாய்,
என்னோடு வாழ்ந்தவன் நீ.
எதுவுமற்று இருக்கையில்
எல்லாமுமாய் இருந்தவன் நீ.
இன்னும் இருப்பாய்.
எல்லோர் காதுகளும்
கேட்காது போகும்வரை,
எல்லோர் வாயும்
பாடாது போகும்வரை
எம் அருகே காற்றாக.