எப்பொழுதும்
இல்லாதவற்றின் மீதே
பேராவல் எழுகிறது.
பெருநகர அடுக்ககத்தின்
பேதை மனத்தில்
தற்சார்பும்,
சிற்றூர்க் குறுந்தெருவின்
சீரிய மனத்திலெழும்
அடுக்ககக் கனவும்.
எப்பொழுதும்
இல்லாதவற்றின் மீதே
பேராவல் எழுகிறது.
பெருநகர அடுக்ககத்தின்
பேதை மனத்தில்
தற்சார்பும்,
சிற்றூர்க் குறுந்தெருவின்
சீரிய மனத்திலெழும்
அடுக்ககக் கனவும்.
முன்பே எழுதிய ஒரு பாடல் செய்தெள்ளிகை (Artificial Intelligence) உதவியால் இசையமைக்கப்பட்டது. பாடல் வரிகளுக்கு நிகரான காட்சி அமைப்புகளை எழுதிய பின் செய்தெள்ளிகை உதவியால் காட்சிகளாக உருமாற்றப்பட்டு அனைத்தையும் இணைத்த விழியம் இது.
(இணைக்குறள் ஆசிரியப்பா)
வான்வளி தன்தொழில் மறந்து வானின்று
தான்பொழி நன்முகில் பொய்த்து நெடும்புனல்
அழுவத் துநீர்மை குறைந் திடினும்
விழுமியர் வஉசி உளங் கொண்ட
நேர்மை குன்றா தென்பது
சீர்மை மிக்க உயர் வாழ்வால்
அறிந்த திவ்வுல கவர் தீரா
உறுதியொ டுவாழ்ந்து மறைந்த பின்னே.
மேலே சீறும் பேரலைகள்,
அடிவயிற்றில்
அறிவின் பேரமைதி.
உதவும் மனத்தொடு
உப்பு தொடங்கி
ஓருநூறு பொருட்கள்.
முத்து பவளமென
ஆழிப் பெருஞ்செல்வம்.
உவர்நீர் நடுவே
நன்னீர் போலே
சொத்திழந்த போதும்
விருந்தளித்த மேன்மை.
கண்ணூர்ச் சிறையின்
கம்பிகளுக்கு நடுவே
வரும்
தலைமுறைக்குக் கையளித்தத்
தமிழ்ச்செல்வம்.
உணவும் இடமும்
உடுத்தும் உடையும்
நிலையில்லாதபோதும்
உரிமை இழந்தவர்
குரலாய் ஒலித்த வீரம்.
பெரியவர் வ.உ.சி
அரிய நெடுங்கடல்.
மூழ்கி எழுவோருக்குப்
படுபொருட்கள் ஏராளம்.
நாம்தான் இன்னும்
முழுவதையும் கண்டடைந்தோமில்லை.