=======================================================
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன் அவர்களின் "சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியல்" எனும் நூலுக்கு நான் எழுதிய மதிப்புரை 2026 மார்ச்சு மாத வையம் இதழில் வெளியாகியிருக்கின்றது.
நன்றி வையம் இலக்கிய மாத இதழ்.
=======================================================
சங்க இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்
நூல் மதிப்புரை - சிராப்பள்ளி ப.மாதேவன்
நூற்களுக்கு மதிப்புரை எழுதுவதென்பது நம்மை நாமே உரசிப் பார்த்துக்கொள்ளும் ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். வாசிப்பை, தேடலை விரிவுசெய்யும், புத்தாக்கம் செய்யும் வல்லமை பல நூற்களுக்கு உண்டு என்பதைப் பலவேளைகளில் உணர்ந்திருக்கிறேன். குமரிமாவட்டம், தோவாளையைச் சேர்ந்த பேராசிரியர் இராமசுப்பிரமணியன் அவர்களின் ‘சங்க இலக்கியத்தில் பண்டைத்தமிழர் வாழ்வியல்’ எனும் கட்டுரைத்தொகுதியும் அப்படியான ஒன்றே. இதுவே, தமிழில் பேரளவு எடுத்தாளப்பெற்ற தலைப்பாகவும் இருக்கக்கூடும்.
