Sunday 25 February 2018

தொலைவில் இருந்து பேசுகிறேன்...

பொருளாதாரத்தின் துரத்தலில்
வெகுதூரம் போய் விட்ட உறவுகள்.
மனதுக்குள் மங்கலாய் நிழலாடும்
அவர்களின் முகங்கள்.
முகமறியாத புதிய தலைமுறை.
மகிழ்ச்சியைக்கூடத் தொலைபேசிகள்
பரிமாறி விடுகின்றன.
ஆனால் சோகம்...
சொல்லியழச் சொந்தங்கள் அருகிலின்றி
சாய்ந்து கொள்ளத் தோள்களின்றி
கண்ணீரே கண்களுக்குத் துணையாக
உதடுகள் திறக்காமல்
ஓலமிட்டு அழுகிற
உறவுகளின் சோகத்தை
எப்படிச் சொல்வதென்று அறியாமல்
புலம்பிக் கொண்டிருக்கின்றன
எங்கெங்கோ தொலைபேசிகள் .

சிராப்பள்ளி மாதேவன்
25 | 02 | 2018

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்