Wednesday 16 May 2018

ஒற்றை விலங்கு

கூடிக் களித்தக் கலவியின் இறுதியில்
ஓடி அண்டம் உடைத்து நுழைந்து
பாடிப் பிறந்த படிமமல்ல நீ.
தாயின் குருதி உணவென வாக
அவள் தன் நெஞ்சு உனக்கெனத் துடிக்கத்
தொப்புள் கொடியில் தொங்கிய உயிர் நீ.
அன்று நீ அவளென இருந்தாய்.
உயிரொடு ஒட்டல் ஒருமுறை நிகழும்
தாயின் வயிற்றில் .
இறையே வரினும் மறுமுறை இல்லை.
எல்லா விலங்கும் குட்டிகள் பேணும்.
தாயைக் காக்கும் தகைமைக் கொண்டு
தரணியில் தனித்த ஒற்றை விலங்கு
மாந்தன் என்பதை மறந்திடல் வேண்டா.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்