Thursday 21 March 2019

இன்று உலக கவிதை நாளாம்...


யாரும் தீண்டாத பூவொன்று தேடினேன்
காற்று சிரித்தது.
என்றும் அழியாத பொருளொன்று தேடினேன்
நெருப்பு சிரித்தது.
யாரும் காணாத நிறமொன்று தேடினேன்
வெளிச்சம் சிரித்தது.
ஊரே இல்லாத காடொன்று தேடினேன்
பறவைகள் சிரித்தன.
போரே நடக்காத இடமொன்று தேடினேன்
நிலம் சிரித்தது.
யாருக்கும் அடங்கா மனிதனைத் தேடினேன்
மரணம் சிரித்தது.
எதற்கும் அழாத கண்களைத் தேடினேன்
இதயம் சிரித்தது.
யாரும் சொல்லாத சொல்லொன்று தேடினேன்
மொழிகள் சிரித்தன.
யாரும் எழுதாப் பாடல் எழுதிட
எனக்குள் நாளும் தவம்.

சிராப்பள்ளி ப.மாதேவன்
21-03-2019

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்