Monday 12 August 2019

உயிர்ப்பறவை


படியிறங்கி தெருவடைந்து
பக்கத்து மனிதரைப் போய்
மெய்தீண்டிப் பேசாமல்
விடியும் வேளைவரும்
ஓர்நாள் முன்னே,
கடுகிச் செல்லவேண்டும் என்
உடம்பிருக்கும் உயிர்ப்பறவை.

உணவெல்லாம் நஞ்சாகி
குணம்கெட்டு கூறிழந்து
கொடுநோய் பிடிகொண்டு
படுக்கையில் மலங்கழிக்கும்
பாழான ஓர்நாள் முன்னே,
பாடிப் பறந்திடவேண்டும் என்னுடலைக்
கூடியிருக்கும் உயிர்ச்சிட்டு.

மகன் உழைப்பின் செல்வங்கள்
மருத்துவத்தில் செலவழியும்
ஓர்நாள் முன்னே, என்
ஊன்சுமக்கும் உயிர்ப்பறவை
வானேகிப் போதல்வேண்டும்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்