Monday 27 July 2020

கவிமணி பிறந்தநாள் - 2020

(இணைக்குறள் ஆசிரியப்பா)

அகரமு தலி துணை யின்றி
பகரு மொழி யனைத் தும்
அனை வரும் அறிய - எளிய
தமிழ்ச் சொற்கள் கோர்த்து
இழியாப் பாக்கள் செய்து
மொழிக்கு அணிவித்த
மூத்த பாவலனே,
இட்டார்  பெரியோர்
இடாதார்  இழிகுலத்தோர் - என்று
நாலில் ஓர் ஔவை
நல்வழியில் சொல்லிச் சென்றார்
எண்ணத்தால் அதை நீட்டி,
மன்னு யிர்க்காக உழைப்பவரே – இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே – என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா
என்ற உம் எழிலடிகள்
ஏற்றம் பெறும் நாளில் - நாஞ்சில்
மண் இன்னும் சிறக்கு மாமே.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்