Thursday 18 May 2023

மண்மூட...

 

கொற்றவன் செய்த

பிழைகண்டுச் சினந்த

ஒற்றைக் கண்ணகிக்கே

பற்றி எரிந்ததாம் மதுரை.

 

பற்றியெரிந்தப் பல்லாயிரம்

கண்ணகிகள்

இட்ட பெருஞ்சாவம்

சுற்றம் சூழ உம்மை

மண்மூடிச் செரிக்குமுன்னே

கண்மூடிச் சாய்வேனோ நான்?

 

 

ஓவியம்: ஐயா மருது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்