Saturday 18 November 2023

வ.உ.சி நினைவேந்தல் 2023 - 2

 

பஞ்சாலைத் தொழிலாளர்
நெஞ்சகத்து உரம் சேர்த்து
கெஞ்சும் நிலைக்கு வஞ்சகரை
அஞ்சவைத்து உழைப்பின் பெறுமானம்
உறுதி செய்த கதை!

கடலே எண்ணெயாாய்
காற்றே நூல் திரியாய்க்
கனன்றெழுந்தப் பெருநெருப்பு
கப்பலாய் மிதந்து கம்பெனியார்
வணிகம் சிதைத்த கதை!

தளைப்பட்டோர் நலம் வேண்டிச்
சிறைக் கொடுமைக் கஞ்சாது
முறைமை தவறிய முரடன்செய்த
கறைகள் மீது வழக்குரைத்து
அறையோலை வாங்கி அணிசேர்த்த கதை!

ஐயா சிதம்பரனார் அறவாழ்வில்
ஆயிரமுண்டு கதைகள், அவர்
நினைவோடு இந்நாளில் மனக்கொள்வோம்;
பாயிரம்போல் அக்கதைகள்
பிள்ளைகட்குச் சொல்லிடவே.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்