Friday, 26 September 2025

வீரவணக்கம்


கண்ணறியாக் கருக்குழியின் 
காரிருளில்,
முகமறியாக் காலத்தின்
முலைப்பாலில்,
விடுதலையைத் தேடி;
விழி திறந்து,

பேராறுகளெல்லாம்
வாய்பிளந்து பார்த்திருக்க,
விழி மூடாது மரணித்த,
மாந்தரினத்தின் 
மாபெரும் ஆயுதமே
வீரவணக்கம்.

ஊரெழுவில் உயிர்த்து
நல்லூரில் உயிரடக்கி
தமிழினத்தை உயிர்ப்பித்த
தலைமகனே!

தீர்ந்துவிடவில்லை
இன்னும் 
விடுதலையின் வேட்கை.

====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
26-09-2020
====================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்