கண்ணறியாக் கருக்குழியின்
காரிருளில்,
முகமறியாக் காலத்தின்
முலைப்பாலில்,
விடுதலையைத் தேடி;
விழி திறந்து,
பேராறுகளெல்லாம்
வாய்பிளந்து பார்த்திருக்க,
விழி மூடாது மரணித்த,
மாந்தரினத்தின்
மாபெரும் ஆயுதமே
வீரவணக்கம்.
ஊரெழுவில் உயிர்த்து
நல்லூரில் உயிரடக்கி
தமிழினத்தை உயிர்ப்பித்த
தலைமகனே!
தீர்ந்துவிடவில்லை
இன்னும்
விடுதலையின் வேட்கை.
====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
26-09-2020
====================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்