இணையத்தில் ஓரங்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, அதன் பார்வையாளர்களைப் பார்க்கும் போது பெரு வியப்பாக, பாவமாக இருக்கும். “நீங்கள் ஒரு பூமர். உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்” என்று சொல்லிவிட்டு என்னை நீங்கள் கடந்து போகலாம். ஆனால், அது ஏனென்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம். விட்டு விடுதலையாக வேண்டும் என்ற உங்கள் எண்ண உந்துதலின் அடிப்படையில் மறைந்து கிடக்கும் (எங்களுக்கு), நீங்கள் அறிந்தே அமிழ்த்தி வைத்திருக்கிற, அழுத்தம் நிறைந்த பலூனை உங்கள் மனக்குளத்தின் அடியாழத்திலிருந்து வெளிக்கொணர்ந்து சமூக வெளியில் மிதக்கவிடுகிறது இந்தப் புத்தகம். அது இயல்பும் கூட.
இந்தப் புத்தகம் வெறுமனே பெருநிறுவனங்களைப் பற்றியதா என்றால், அதை விட அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றியே பெரும்பாலும் பேச முனைகிறது. அங்கே நிலவும் முன்முடிவுகளுடன் கட்டமைக்கப் பட்ட உரையாடல்களைப் பதம் பிரிக்கிறது. அந்தச் சொற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டவர்களின் மன உணர்வுகளைப் பொது வெளியில் பேசுகிறது. அது ஆசிரியரின் எண்ண ஓட்டம் மட்டுமல்ல, இன்னும் பலரின் மனக் குமுறல்களும், ஆற்றாமையும் கொண்ட தொகுப்பு. இவை அனைத்தையும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என எள்ளலும், நகைப்பும், பகடியும், நக்கலும் குழைத்த எளிய மொழி நடையில் விளம்புகிறது. காட்டாக,
