Sunday 3 June 2018

என்று விழிப்பாய்...


வறண்டுபோன புற்களுக்கென்று

வானம் பொழிவதில்லை.

விதைகள் முளைக்கவேண்டுமென்று

வெயில் காய்வதில்லை.

களைகள் வளர்ந்ததென்று

மண் கவலைகொள்வதில்லை.

புலிகள் கொல்லாதிருக்கவேண்டி

மான்கள் பூசைகள் செய்வதில்லை.

ஆனை அழிக்கும் மரங்கள்பற்றி

ஆடுகளுக்கு அச்சமில்லை.

அடர்ந்திருந்த இயலுக்குள்

ஆறாமறிவு கூராய் நுழைந்ததனால்

கற்சிறை கசியும் நீர்போல் ஆசை

மெல்ல மெல்லவே இந்த

மேதினி அழித்ததடா

எண்ணியத்தில் திண்ணியராய்

இறுமாந்திருந்த மண்ணே

என்று விழிப்பாய்.

 
 
 

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்