Saturday 29 June 2019

பட்டறிவு


எறும்பை வைத்து அளவெடுத்தால்
யானை மிக உயரம்.
திமிங்கிலத்தால் அளவுகொண்டால்
பனைமூட்டில் மலைவாழை.
அளவுகோல் மாறுவதால்
ஆனை உயரம் மாறாதே.
கடல்களுக்கு எல்லைக்கோடு
கரைகள் இல்லையே.
கடலடியில் நீண்டுசெல்லும்
தரையும் கூடவே.
பெரியதென்றும் சிறியதென்றும்
உலகில் எதுவும் இல்லையே.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்