Wednesday 25 March 2020

காலவரையறையின்றி...

புனிதநூலாகவே இருந்தாலும்
தொட்டபின்
கைகழுவ வேண்டியிருக்கிறது.

கடவுளே வந்தால்கூட
ஐந்தடி இடைவெளியில்,
வாய்மூடித்தான்
அளவளாவ வேண்டியிருக்கிறது.

வழிபாட்டிடங்கள்
வெற்றுக் கட்டிடங்களாய்
நின்றுகொண்டிருக்கின்றன.

மரணத்தின் அச்சுறுத்தல்
மதங்களுக்கு
விடுமுறை விட்டிருக்கிறது.

எல்லாக் கடவுள்களும்
சமூகத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்,
காலவரையறையின்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்