Tuesday 11 July 2023

அருகே கடவுள்


ஒற்றைக் கொட்டொன்று

ஓசையெழுப்பும்

நட்ட நடு இரவில்,


வெட்ட வெளியில்

வரம்பின்றி

விரிந்துகிடக்கும் மையிருளில்,


சுடலைமாடன் காடேக

மார்பில் அணைத்தத்

தீப்பந்த வெளிச்சத்தில்


மாடனின் கச்சையை

இறுக்கிப் பிடித்து

“சொள்ளமாடா மழ எப்பவரும்?”

என்று கேட்ட

வேலப்பண்ணனின்

மனதுக்கும் மாடனுக்கும்

மயிரிழை தூரந்தான்.


===========================

'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

11-07-2023

===========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்