Sunday, 20 July 2025

நெடுங்கடல் வ.உ.சி


மேலே சீறும் பேரலைகள், 

அடிவயிற்றில் 

அறிவின் பேரமைதி.


உதவும் மனத்தொடு 

உப்பு தொடங்கி

ஓருநூறு பொருட்கள்.

முத்து பவளமென

ஆழிப் பெருஞ்செல்வம்.


உவர்நீர் நடுவே

நன்னீர் போலே

சொத்திழந்த போதும் 

விருந்தளித்த மேன்மை.


கண்ணூர்ச் சிறையின்

கம்பிகளுக்கு நடுவே

வரும்

தலைமுறைக்குக் கையளித்தத்

தமிழ்ச்செல்வம்.


உணவும் இடமும்

உடுத்தும் உடையும்

நிலையில்லாதபோதும்

உரிமை இழந்தவர்

குரலாய் ஒலித்த வீரம்.


பெரியவர் வ.உ.சி

அரிய நெடுங்கடல்.

மூழ்கி எழுவோருக்குப் 

படுபொருட்கள் ஏராளம்.

நாம்தான் இன்னும் 

முழுவதையும் கண்டடைந்தோமில்லை.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்