முனைவர் துளசி. இராமசாமி எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1987ல் வெளியிட்ட மங்கல தேவி கண்ணகி கோட்டம் (நாட்டுப்புறவியலார் அணுகுமுறை) எனும் நூலில்,
Friday, 11 July 2025
கண்ணகிக் கோட்டம் - எது மெய்?
கூடலூர் மக்களுக்குப் பாத்தியப்பட்ட கோவில் போன்று இருப்பது தான் மங்கலதேவி கோட்டம். இம்மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம் என்று முதன்முதலில் உலகுக்குச் சொல்லி வந்தவர்கள் கூடலூர் மக்களாவார்கள்; ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்று இருந்தது; தமிழகத்திலுள்ளவர்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய சங்க மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார்தான் முதன் முதலில் மங்கலதேவி கோட்டம் கண்ணகி கோட்டமாகும் என்று முறையாக அறிக்கைவிட்டு, அதை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கு.காமராசு அவர்களிடம் 1957-இல் முறையிட்டு இக்கண்ணகி கோட்டத்தைச் சீர்படுத்த வேண்டும்; சுற்றுலா மையமாக்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். ஆனால் ஏனோ அவரின் முறையீட்டை யாரும் கண்டு கொள்ள வில்லை.
Thursday, 19 June 2025
திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்
எல்லோர் வீட்டு வாயிலிலும்
நின்றுகொண்டிருக்கிறது
மரணம்,
ஐயமில்லை.
நாம் எதற்கு
வாயிலைத் திறக்கவேண்டும்?
திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்.
அச்சமின்றி இருங்கள்.
அதுவாக வரட்டும்.
காத்திருங்கள்.
======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
19-06-2021
======================
Saturday, 14 June 2025
தேயா மலை
செம்மறியாடுகள் முட்டிச்
சாய்ந்திட
செம்மண் சுவரல்லடா
தலைவன்;
திரைகடல் பல்லாண்டு
தீண்டியும் தேயாத
திருகோணமலையடா!!
=====================
சிராப்பள்ளி ப.மாதேவன்
14-06-2021
=====================
Monday, 9 June 2025
மாம்பாலும் வைகாசி விசாக நாளும்
சென்னையில், ஒரு மணி நேரமாகப் பெருங்காற்றுடன் பெய்து கொண்டிருந்த சிறு மழையும் ஓய்ந்து மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. மாலை நேரத்து மென் குளிர். படித்துக் கொண்டிருந்த புத்தகப் பக்கங்களுக்கிடையே, உருகிய சருக்கரையில் குழையும் சுக்கின் நறுமணம். கூடவே குமுளிமெட்டின் ஏலக்காய் உடைந்து, கொதிக்கும் அரிசிமாவில் சுருண்டு சுருண்டு எழுந்து காற்றில் தெளிக்கும் நறு நாற்றம். அடுக்களை நோக்கி நடக்கிறேன். உருளியில் மாம்பால் கொதித்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய நார் கொண்ட மாம்பழத் துண்டுகள் கூழில் மேலெழுந்து மேலெழுந்து அடங்குகின்றன.
Subscribe to:
Posts (Atom)