எல்லோர் வீட்டு வாயிலிலும்
நின்றுகொண்டிருக்கிறது
மரணம்,
ஐயமில்லை.
நாம் எதற்கு
வாயிலைத் திறக்கவேண்டும்?
திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்.
அச்சமின்றி இருங்கள்.
அதுவாக வரட்டும்.
காத்திருங்கள்.
======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
19-06-2021
======================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்