Thursday, 19 June 2025

திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்

 



எல்லோர் வீட்டு வாயிலிலும்
நின்றுகொண்டிருக்கிறது
மரணம்,
ஐயமில்லை.

நாம் எதற்கு
வாயிலைத் திறக்கவேண்டும்?
திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்.
அச்சமின்றி இருங்கள்.
அதுவாக வரட்டும்.
காத்திருங்கள்.

======================
சிராப்பள்ளி ப.மாதேவன்
19-06-2021
======================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்