Wednesday 10 May 2017

பயன்பாடு.

   சற்றுமுன் இரவு 8:10 மணி 10/05/2017 முதன்முறையாக காணொளிப் பேச்சு(video calling) ன் மிகப்பெரியப் பயன்பாட்டைப் பார்த்தேன். 
   சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தேன். எதிரில் சற்று தூரத்தில் ஓர் இளைஞர் திறன்பேசியொன்றைக் கையில் பிடித்துக்கொண்டு அதன் திரையைப் பார்த்து கை விரல்களை அசைத்துக்கொண்டிருந்தார். வழக்கம் போல் என் வயதான புத்தி (இளைஞர்களைப் பார்த்தால் வருமே அதுதான்) இவர்களுக்கு என்ன ஆயிற்று, ஒரு நாகரிகம் இல்லாமல் .. என்று எண்ணத்தொடங்கியது.
    அவரை நெருங்கிவிட்டேன். எந்த ஓசையும் கேட்கவில்லை. நான் தான் நாகரிகமற்று மெதுவாக அவரை மெதுவாகப் பார்த்தேன். அப்பொழுது தான் தெரிந்தது அவர் மாற்றுத்திறனாளி என்பது. பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாதவர். அவர்கள் பேசும் சைகை மொழியில் திரையில் எதிரில் இருந்த மற்றொரு மாற்றுத்திறனாளியோடு எளிதாக உரையாடிக்கொண்டிருந்தார். அறிவியலின் இந்தப்பயன்பாடு என்னை வியப்பில் ஆழத்தியது. பேசமுடிந்த கேட்கமுடிந்த எல்லோருக்கும் கிடைத்த வாய்ப்பு இப்பொழுது அவர்களுக்கும். திறன்பேசியில் இந்த செயல் முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய அந்த முகம் தெரியா மனிதனை உளமாற வாழத்தினேன். அந்த இளைஞரின் தோளைத் தட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
       இதுபோல் பார்வையற்றோர் பயன் படுத்தும் வகையான உணர் தொடுதிரையொன்றை யாரேனும் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆவலுடன். 
       
      ப.மாதேவன். 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்