Friday 19 May 2017

பெரும் பயணம்

குமரியில் தொடங்கி
வானமலை கடந்து
சிந்துவில் விரவி
எரிகடல் நுழைந்து
எல்லம் படைத்து
சுமேரியம் வளர்த்தோம்.

இயற்கையும் செயற்கையும்
துரோகமும்
துடைத்திட முனைகின்றன.

என்பிலதனைக் காயும் வெயில் போல
எம்மீது விழும் கல்விச்சூடு
இருட்டுக்குள் வரையப்பட்ட
கறுப்பு ஓவியமாய் நாங்கள்
வீடுகள் இடித்து ஊர்கள் அழித்த
அடையாளமற்ற ஆறுவழிச்சாலையாய்
எங்கள் வரலாற்றின் பாதை.

திக்கற்ற ஓர்நாளில்
தூரத்தே ஓர் மின்னல்
செவ்விலக்கிய அடர்மேகம்
தனித்தமிழின் மூச்சுக்காற்று
முதல் துளி முகம் தொட்டது
ஓ..
பெய்யட்டும் பேய்மழை
குளிரட்டும் எம்மண்
முளைக்கட்டும் பெருமரங்கள்
அதன்
இலைகளின் கதகதப்பில்
என்பு முளைக்கட்டும்
எழட்டும் எம்மினம்
அன்பிலதனைக் காயட்டும்
அறம். 

படம்: ஜார்ஜ் நியூட்டன்

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்