Saturday 10 March 2018

பெருஞ்சித்திரனார்


  • தமிழாற்றங்கரையில் தழைத்தோங்கிய
    தடவுநிலைப் பலா.
    மறைமலைப் பாவாணரென தக்கார் தமைச்
    சிறகிற் சுமந்தச் சிம்புட்பறவை.
    தேயத்தின் எல்லை வகுக்க நாளெல்லாம்
    ஓய்வின்றிச் சொல்லே ரோட்டிய உழவன்.
    சூரியனைப் பிழிந்தெடுத்தச்
    சுட்டெரிக்கும் சொற்கூட்டால
    அறம்பாடிய அரிமா.
    இவர் தமிழ் கனிச்சாறு ஆதலால்
    ஈங்கிவரைப் பெற்றது தமிழர்தம்
    ஈடிலாப் பெரும் பேறே.
  •  

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்